பெண்களுக்கான சூப்பர் வளர்ச்சி திட்டங்கள் – மத்திய அரசு அறிவிப்பு!!
இந்தியாவில் பெண்களின் வளர்ச்சிக்காக நடைமுறையில் இருக்கும் வளர்ச்சி திட்டங்கள் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
வளர்ச்சி திட்டங்கள்:
இந்தியப் பொருளாதார வளர்ச்சி மற்றும் பெண்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு ஏகப்பட்ட நலத்திட்ட உதவிகளை அறிமுகம் செய்து வருகிறது. மேலும், பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் ஆகிய துறைகளில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு முயற்சியினை செய்து வருகிறது. மேலும், போர்ப் பணிகளிளிலும் பெண்களுக்கு நிரந்தரப் பணி, தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களை சேர்க்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
வரம்பை தாண்டும் பள்ளி கட்டணங்கள் – தவிக்கும் பெற்றோர்!
இதனை தொடர்ந்து, அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையில் முதன் முறையாக பெண்களை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. இந்த இந்திய சமுதாயத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் மேம்பாடு அடைய வேண்டும் என்பதால் மத்திய அரசு ஏகப்பட்ட திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இதற்கு பிறகும் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக பல திட்டங்கள் நாட்டில் செயல்படுத்தப்படும் என மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.