கொரோனாவால் மறைந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு 2 ஆண்டுகள் சம்பளம் – பிரபல நிறுவனம் அறிவிப்பு!!
கொரோனா பாதிப்பால் மரணம் அடையும் தங்களது ஊழியர்களுக்கு சன் பர்மா என்ற நிறுவனம் 2 ஆண்டுகள் சம்பளத்தினை ஊழியர்களின் குடும்பத்திற்கு வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
சன் பர்மா நிறுவனம்:
இந்தியாவின் மிகப்பெரிய மருந்து நிறுவனங்களில் ஒன்று சன் பர்மா நிறுவனம். இந்த நிறுவனத்தில் முழு நேர பணியாளர்களாக 27 ஆயிரம் ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர். இந்த நிறுவனத்தின் தலைமையிடம் மும்பையில் இருக்கின்றது. இந்த நிறுவனம் தற்போது தங்களது ஊழியர்களுக்கு என்று ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
தர்மபுரியில் மிகத்தீவிர முழு ஊரடங்கு உத்தரவு – அரசுக்கு கோரிக்கை!!
அது, கொரோனா பாதிப்பின் காரணமாக மரணம் அடையும் தங்களது ஊழியர்களின் குடும்பத்திற்கு 2 ஆண்டுகள் சம்பளத்தினை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஏப்ரல் 1, 2020 ஆம் தேதிக்கு பிறகு கொரோனாவால் மறைந்தவர்களுக்கு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, அலுவலக குழு காப்பீடு திட்டத்தை தாண்டி இது இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
இறந்த ஊழியர்களது குடும்பத்தின் பொருளாதார நிலையினை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்த பணியாளரின் குழந்தைகளின் கல்வி செலவும் நிறுவனம் சார்பில் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவினை எடுத்துள்ள நிறுவனத்திற்கு அனைவரும் தங்களது பாராட்டினை தெரிவித்து வருகின்றனர்.