தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ் புதல்வன் திட்டம்:
தமிழக அரசு பெண்களின் நலனை மையமாக கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. இதில் புதுமைப்பெண் திட்டமும் ஒன்று. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் உயர்கல்வியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதனை அதிகரிக்கும் தமிழக அரசின் சார்பில் புதுமை பெண் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ரூ.31000/- மாத ஊதியத்தில் Junior Research Fellow காலிப்பணியிடங்கள் – தேர்வு எழுத தேவையில்லை!
அதனை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழக அரசுப் பள்ளியில் படித்து, உயர்கல்வியில் சேரும் அனைத்து மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் “தமிழ் புதல்வன் திட்டம்” விரைவில் தொடங்கப்படும் என்றும். கோடை விடுமுறை முடிந்து ஜூன் 19 ஆம் தேதி கல்லூரிகள் திறந்த உடன், மாணவர்கள் இத்திட்டத்தில் இணைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.