மாணவர் சேர்க்கைக்கான கட் ஆப் மதிப்பெண்கள் குறைப்பு ???
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து அனைத்து விதமான பாடப்பிரிவுகளுக்கான அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இருந்து மாணவர்களுக்கான விண்ணப்பப் பதிவு மேற்கொள்ள அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
இதனால் மாணவர்கள் உயர் கல்விகளுக்காக கல்லூரிகளில் பதிவு செய்ய தொடங்கி விட்டன. மேலும் இந்த ஆண்டு மாநில பாடத்திட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள் புதிய பாடத்திட்ட அடிப்படையில் தேர்வு எழுதினர்.
இதனால் வினாத்தாள்கள் கடினமாக இருந்ததாக ஆசிரியர்கள், மாணவர்கள் தெரிவித்து இருந்தனர். இதனால் மாணவர்களின் கட் ஆப் மதிப்பெண்களும் குறைந்துள்ளது. வழக்கமாக 170 க்கும் மேலே உள்ள கட் ஆப் மதிப்பெண்கள் இந்த ஆண்டு 150 வரை குறைந்துள்ளது.
இதனால் பலதரப்பட்ட மாணவர்களுக்கும் பல முன்னணி பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்பதாக கல்வியாளர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும் மாணவர்கள் அதிகளவு கட் ஆப் மதிப்பெண்கள் வைத்திருந்தாலும் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதனால் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு எந்த வித பாதிப்பும் இருக்காது என கல்வியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |