தமிழகத்தில் அமையவுள்ள அதிநவீன விளையாட்டு நகரம் – எங்கு தெரியுமா? அமைச்சர் பதில்!
தமிழகத்தில் விளையாட்டு நகரம் உருவாக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய விளையாட்டு துறை அமைச்சர் விரைவில் அதற்கான இடம் தேர்வு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
விளையாட்டு நகரம்:
தமிழகத்தில் நேற்று (மார்ச் 20) 2023 – 2024 ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளது. அதில் விளையாட்டு துறை சார்பில் வரும் ஆண்டில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் மூலம் உலகளவிய அதிநவீன விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு வராத மாணவர்களின் விவரங்கள் – அரசு தேர்வுத்துறை உத்தரவு!
இது குறித்து பேசிய இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தமிழகத்தில் விளையாட்டு நகரம் அமைய தற்போது 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு இடம் விரைவில் இறுதி செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Follow our Instagram for more Latest Updates
மேலும் நேரு விளையாட்டு மைதானத்தை மறு சீரமைக்காக ரூ. 25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே நேரு விளையாட்டு மைதானத்தில் விளக்குகளை மாற்ற 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.