2வது IND VS SA T20 போட்டி – 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி!!
நேற்று நடைபெற்ற இரண்டாவது T20 போட்டியின் போது கனமழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டதையடுத்து தென்னாபிரிக்கா அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
IND VS SA T20 போட்டி:
இந்திய அணி ஐந்து ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆஸ்திரேலியா அணியுடனான வெற்றிக்கு பிறகு தற்போது மூன்று ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணியுடன் மோதி வருகிறது. இரண்டு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி டிசம்பர் 10ம் தேதி நடைபெற இருப்பதாக அறிவித்திருந்த நிலையில் கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று இரண்டாவது டி20 போட்டி டர்பனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியினர் பந்து வீச்சை தேர்வு செய்தனர்.
Follow our Instagram for more Latest Updates
இதனால், முதலில் களம் இறங்கிய இந்திய அணி 19. 3 ஓவர்கள் விளையாடும் போதே கனமழை காரணமாக போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்பில் 180 ரன்களை குவித்திருந்தது. இதன் பின்னர், கனமழை காரணமாக போட்டி 15 ஓவராக குறைக்கப்பட்டது. இதனால், தென்ஆப்பிரிக்கா அணியினருக்கு 152 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தென்னாபிரிக்கா அணி 13. 5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றனர். இதனால், நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்று 1-0 என்கிற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.