மே 31 வரை பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு – மாநில கல்வித்துறை அறிவிப்பு!!
கொரோனா இரண்டாம் அலை காரணமாக சிக்கிம் மாநிலத்தில் ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு ஏப்ரல் 30 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது விடுமுறை முடிவடையுள்ள நிலையில் அதனை மே 31 வரை நீட்டித்து உள்ளது.
விடுமுறை நீட்டிப்பு:
கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது. நோய் பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதனால் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளையும், ஊரடங்கு விதிமுறைகளையும் விதித்துள்ளது. ஏற்கனவே கடந்த வருட கொரோனா பாதிப்பினால் பள்ளிகள் திறப்பது கேள்விக்குறியாக இருந்தது. பிறகு தொற்று பரவல் குறைந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டது.
ஏப்ரல் 27 முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு – மாநில அரசு அறிவிப்பு!!
தற்போது கொரோனா 2ம் அலை காரணமாக பல மாநில அரசுகள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. இந்தியாவின் வட மாநிலங்கள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சிக்கிம் மாநிலத்திலும் பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு மே 1 வரை விடுமுறை அறிவித்துள்ளது சிக்கிம் அரசு. மேலும் இம்மாநிலத்தின் கிழக்கு பகுதியில் புதிதாக 148 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
TN Job “FB Group” Join Now
இதனால் சிக்கிம் மாநில அரசு ஏற்கனவே ஏப்ரல் 30 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு அறிவித்த விடுமுறையை தற்போது மே 1 வரை நீட்டித்துள்ளது. மாணவர்கள் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலமாக கல்வி கற்க வேண்டும் வேண்டும் எனவும், ஆசிரியர்கள் மட்டும் கல்வி நிறுவனங்களுக்கு வந்து இணையம் மூலமாக கற்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கல்வியின் அனைத்து மதிப்பீடுகளும் ஆன்லைன் மூலம் தொடரும் என சிக்கிம் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.