பட்டியலிடப்பட்ட சாதியினருக்கான புதிய கல்விக்கொள்கை திட்டம் – அரசு அறிமுகம்!
இந்தியாவில் பட்டியலிடப்பட்ட சாதியினருக்கு சிறந்த கல்வியை வழங்கும் பொருட்டு SHRESHTA என்கிற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
SHRESHTA:
இந்தியாவில் உள்ள பட்டியலிடப்பட்ட சாதியினரின் கல்வி மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் SHRESHTA என்கிற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, கல்வித் துறையில் SC மாணவர்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதும், அரசின் வளர்ச்சி முயற்சிகளை விரிவுபடுத்துவதும் இந்த திட்டத்தின் நோக்கமாக கொண்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அதாவது, SHRESHTA திட்டத்தின் மூலமாக சிறந்த CBSE மற்றும் மாநில வாரியத்தின் மூலமாக இணைக்கப்பட்ட தனியார் குடியிருப்புப் பள்ளிகளில் திறமையான SC மாணவர்கள் சேர வழிவகுக்கிறது. அதாவது, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான திறமையான SC மாணவர்களை தேசிய நுழைவுத் தேர்வின் மூலமாக தேர்வு செய்கிறார்கள்.
முதியோர் ஓய்வூதியம் ரூ.3000ஆக உயர்த்தப்படும் – முதல்வர் அறிவிப்பு!
இவ்வாறு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஷ்ரேஷ்டா (NETS), நேஷனல் மூலமாக கல்வியை முடிக்க வழிவகுக்கிறது. மேலும், பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்துக்குள் உள்ள பட்டியலின சமூகத்தை சேர்ந்த திறமையான ஏழை மாணவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் பலன் வழங்கப்படுகிறது.