சென்னை மெட்ரோ நிலையங்களில் கடைகள் – தனியாருக்கு அழைப்பு!
தமிழகத்தில் சென்னை மெட்ரோ நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் கடைகள் வாடகைக்கு விட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மெட்ரோ நிறுவனத்தின் சார்பில், தனியாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ நிலையங்கள் :
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக மாநிலம் முழுவதும் கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதனால் அனைத்து தொழில்களும் முடங்கியது. சிறு குறு வணிக நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. வங்கிகளில் வாங்கிய கடன்களை திரும்பி செலுத்த முடியாத நிலையில் தவித்து வருகின்றனர். மேலும் இந்த ஊரடங்கால் ரயில்வே துறையும் சரிவை சந்தித்துள்ளது. பயணிகள் வருகை இல்லாததால் பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டது.
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கதிர் பாடிய பாடல் – குவியும் வாழ்த்துக்கள்!!
ரயில் நிலையங்களில் பயணிகள் வருகை இன்றி வெறிசோடி காணப்பட்டது . அதனால் ரயில்கள் நிலையங்களில் இயங்கும் நடைமேடை கடைகள் விற்பனை இன்றி மூடப்பட்டது. அதனை தொடர்ந்து சென்னையில் நகர பகுதிகளில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களும் கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. மெட்ரோ ரயில் நிலையங்களில் செயல்படும் கடைகள் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு ஓரிரு கடைகள் மட்டும் இயங்கியது.
தமிழகத்தில் ஆகஸ்ட் 23க்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வரின் ஆலோசனை தொடங்கியது!
தற்போது மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணியர் பயன்பாட்டு தவிர, மற்ற இடங்களை தனியார் நிறுவனங்கள் அலுவலகங்கள் வைக்கவும்,உணவகங்கள் மற்றும் பிற கடைகள் வைப்பதற்கு வாடகைக்கு விட திட்டமிட்டுள்ளது. மேலும் சென்ட்ரல் மெட்ரோ நிலையம் இடையே 39 ரயில் நிலையங்கள் உள்ளன இங்கு கடைகள் வைப்பதற்கு மெட்ரோ நிறுவனத்தின் சார்பில், தனியாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.