இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு – தேர்தல் ஆணையம் தகவல்!
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கிய நிலையில், மாலையுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல்:
தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு மாவட்ட வாரியாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது புதிதாக பிரிக்கப்பட்டிருந்த செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் எல்லை பிரிக்கப்படாமல் இருந்ததால் அந்த பகுதிகளில் தேர்தல் நடக்க வில்லை. இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தெதாலை இரண்டு கட்டங்களாக முறையே அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் நடத்த திட்டமிட்டது.
சென்னை மெரினா கடலில் குளிக்க தடை,மீறினால் கடும் நடவடிக்கை – காவல் துறை எச்சரிக்கை!
35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும், 626 ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கும், 1,324 கிராம ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது. அதேபோல், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 6ம் தேதி முடிந்த நிலையில், அக்டோபர் 9ம் தேதியான இன்று காலை 7 மணிக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.
TN TRB முதுநிலை ஆசிரியர் வேலைவாய்ப்பு 2021 – வயது வரம்பு உயர்வு விரைவில் அறிவிப்பு!
6 மணிக்கு மேல் வாக்குப்பதிவு செய்ய வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு செய்யப்பட்டது. முதல்கட்டமாக 39 ஒன்றியங்களில் நடைபெற்ற வாக்குபதிவில் 77.43 சதவிகிதம் வாக்குப் பதிவானது குறிப்பிடத்தக்கது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததை தொடர்ந்து வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. இரண்டு கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் அக்.12 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.