![நாளை முதல் 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாநில அரசு அனுமதி! நாளை முதல் 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாநில அரசு அனுமதி!](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2021/10/நாளை-முதல்-9-முதல்-12-ஆம்-வகுப்புகளுக்கான-பள்ளிகள்-768x576.jpg)
நாளை முதல் 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாநில அரசு அனுமதி!
கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள காரணத்தால் வரும் அக்டோபர் 18ம் தேதியான நாளை முதல் மாநிலத்தில் உள்ள 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2ம் அலை பாதிப்புகள் குறைந்து மீண்டும் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளில் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாதிப்பு குறைந்துள்ள பல மாநிலங்களில் முன்னதாக உயர்கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இன்னும் பல மாநிலங்களிலும் பள்ளிகள் திறப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வெள்ளி அன்று பள்ளிகள் திறப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
ஜீ தமிழ் பிரபல சீரியல்களின் சீசன் 2 ப்ரோமோ வெளியீடு – ரசிகர்கள் உற்சாகம்! எகிறும் எதிர்பார்ப்பு!
அப்போது, மாநிலக் கல்வி இயக்குநர் பூஷன் சவைகர் கோவா அரசு ஒரு நிபுணர் குழுவுடன் கலந்தாலோசித்த பிறகு நேரடி வகுப்புக்களை மீண்டும் திறப்பதற்கான இறுதி முடிவை எடுத்துள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார். அதன்படி, அக்டோபர் 18ம் தேதியான நாளை முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் கோவிட்-19 வழிகாட்டுதல்கள் மற்றும் நிலையான பாதுகாப்பு நடைமுறைகளுடன் பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதி அளித்துள்ளது. மேலும், பள்ளிகளின் உள்கட்டமைப்பு மற்றும் உள்ளூர் நிலைமைகளை கருத்தில் கொண்டு பள்ளிகளை திறப்பது தொடர்பான முடிவை நிர்வாகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்க்கும் – சென்னை வானிலை மையம்!
இது தொடர்பாக பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், மாநில அரசின் அடுத்த உத்தரவு வரும் வரை, பள்ளி செயல்பாடுகள் மற்றும் கூட்டங்களை நடத்தக்கூடாது. தேவைப்பட்டால் ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகளை கலப்பின முறையில் தொடரலாம் என்றும், பள்ளிகளில் கண்டிப்பாக கோவிட் -19 வழிகாட்டுதல்கள், முகக்கவசம் அணிவது, வழக்கமான வெப்பநிலை சோதனைகள் மற்றும் நிறுவனங்களின் நுழைவு வாயில்களில் சுத்திகரிப்பு போன்ற அனைத்தும் முறையாக கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.