ஜீ தமிழ் பிரபல சீரியல்களின் சீசன் 2 ப்ரோமோ வெளியீடு – ரசிகர்கள் உற்சாகம்! எகிறும் எதிர்பார்ப்பு!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த இரண்டு சீரியல்கள் பற்றிய லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
ஜீ தமிழ் சீரியல்கள்
ரசிகர்கள் பலரும் தற்போதைய காலகட்டத்தில் மிகவும் விரும்பி பார்ப்பது சீரியல்களை தான். இதன் காரணமாக தனியார் தொலைக்காட்சிகள் மக்கள் விரும்பும் வகையில் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அதிலும் குறிப்பாக சன், விஜய் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி மத்தியில் பெரும் போட்டியே இதற்காக நிலவி வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்தது.
கண்ணனுக்கு குழந்தையை காட்ட நினைக்கும் தனம், மறுக்கும் குடும்பத்தினர் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ!
குறிப்பாக சத்யா மற்றும் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி ஆகிய சீரியல்கள் மிகவும் பிரபலம் என்று தான் கூற வேண்டும். இந்த இரு சீரியல்களும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதை அம்சத்துடன் வெளியாகி வந்தது. இதன் காரணமாக இதற்கு ரசிகர் பட்டாளம் தனியாக இருந்து வந்தது. ஆனால் ரசிகர்கள் கவலையடையும் விதமாக இந்த இரண்டு சீரியல்கள் சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கடைசி எபிசோட் வரும் அக்டோபர் 24ஆம் தேதி ஒளிபரப்பப்படும் என்றும் கூறப்பட்டது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் முல்லையின் சொந்த குரல் – ரசிகர்கள் பாராட்டு மழை!
இதனால் வேதனை அடைந்த ரசிகர்கள் பலர் மீண்டும் இந்த சீரியல்களை ஒளிபரப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர். மக்களின் கோரிக்கையை ஏற்று தற்போது தொலைக்காட்சி நிறுவனம் ஒரு செய்தியினை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால் இந்த இரு சீரியல்களின் அடுத்த சீசன் கூடிய விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது என்பது தான். அது குறித்து ஒரு ப்ரோமோவும் வெளியிட்டிருக்கின்றனர். இதனால் ரசிகர்கள் மீண்டும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மீண்டும் ஒளிபரப்பாக இருக்கும் இந்த சீரியல்கள் வித்தியாசமான கதைக்களத்துடன் இருக்கும் என்று நம்பப்படுகிறது.