தமிழக பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை குறித்த முக்கிய அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் வெளியீடு!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை குறித்த முக்கிய அறிவிப்பு - மாவட்ட ஆட்சியர் வெளியீடு!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை குறித்த முக்கிய அறிவிப்பு - மாவட்ட ஆட்சியர் வெளியீடு!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை குறித்த முக்கிய அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் வெளியீடு!

தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்களுக்கிடையே இடைநிற்றலை குறைக்கும் வகையில் தமிழக அரசு சார்பாக கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது சென்னை மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கல்வி உதவித்தொகை

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில், நடப்பு கல்வியாண்டில் ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆதிதிராவிட நலத்துறை மூலமாக வழங்கப்பட இருக்கும் கல்வி உதவித்தொகையை பெற அஞ்சல் துறையில் இந்தியா போஸ்ட் வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு தடை – மசோதா மனு தாக்கல்!

அத்துடன் மாணவ, மாணவிகள் தங்களின் பள்ளிகளில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் கணக்கு தொடங்குவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மாணவ மாணவிகள் தங்களின் பகுதிக்கு உட்பட்ட தபால்காரர்களிடம் கைப்பேசி மற்றும் பயோ மெட்ரிக் அலகு ஆகியவற்றை பயன்படுத்தி சுலபமாக கணக்கு தொடங்கி கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

இதற்கு தங்களின் ஆதார் மற்றும் கைபேசி எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி இதன் மூலமாக தங்களின் விரல் ரேகைகளை பதிவு செய்து ஒரு சில நிமிடங்களில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் கணக்கு தொடங்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும் வருகிற மார்ச் 25 ஆம் தேதிக்குள் வங்கி கணக்குகளை தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!