மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட் – பண மழையில் நனைய போறீங்க!
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அண்மையில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஊதியமும் உயர்த்தி அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஊதியம்:
மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 7வது ஊதியக்குழுவின் அடிப்படையில் அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டு 42% ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் 2024ம் ஆண்டு தேர்தல் வரவுள்ளதால் இந்த நேரத்தில் பிக்மென்ட் காரணி உயர்த்தப்பட்டு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பிட்மெண்ட் காரணி 2.57% ஆக உள்ளது. இதனால் ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியமாக 18,000 வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கார், பைக் விலை உயரபோகுது..சாலை வரி உயர்வு எதிரொலி!
இந்த நிலையில் ஊழியர்கள் பிட்மென்ட் காரணியை 3.68 ஆக உயர்த்த கோரிக்கைகள் எழுந்து வருகிறது. அவ்வாறு உயர்த்தப்பட்டால் ஊழியர்களின் ஊதியம் வெகுவாக உயரும். மேலும் அடிப்படை ஊதியம் 26,000 ஆக அதிகரிக்கும். அதே போல அகவிலைப்படியும் 4% அதிகரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.