உங்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை கிடைக்கவில்லையா? – காத்திருக்கும் குட் நியூஸ்!

0
உங்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை கிடைக்கவில்லையா? - காத்திருக்கும் குட் நியூஸ்!
உங்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை கிடைக்கவில்லையா? - காத்திருக்கும் குட் நியூஸ்!
உங்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை கிடைக்கவில்லையா? – காத்திருக்கும் குட் நியூஸ்!

தமிழகத்தில் ரூபாய் ஆயிரம் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்துள்ள நிலையில் இதுவரை பணம் கிடைக்காதவர்களுக்கான குட் நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது.

மகளிர் உரிமைத்தொகை:

தமிழகத்தின் செப்டம்பர் 15ஆம் தேதி முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் மூலம் தொடங்கி வைக்கப்பட்ட மாதம் ரூபாய் 1000 மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் முதல் கட்டமாக ஒரு கோடியே 6,52,000 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். 66 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், இவர்களுக்கு மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டது. அதன்படி மேல்முறையீடு செய்யப்பட்டு புதிதாக 7.35 லட்சம் பயனாளிகள் நவம்பர் மாதம் முதல் இத்திட்டத்தில் மேலும் இணைக்கப்பட்டு தற்போது மொத்தம் ஒரு கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பெண்கள் திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

தமிழகத்தில் பொதுத்தேர்வு அறிவிப்பு – தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு!!

மேலும் இரண்டாம் முறை மேல்முறையீட்டு சமயத்திலும் பலரின் விண்ணப்ப மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இவர்களுக்கான வாய்ப்புகள் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தது. தற்போது நிராகரிக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுதாரர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பும் பணி தற்போது தொடங்கியுள்ளதாக அரசு தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இது குறித்த விசாரணைக்கு தங்களை தொடர்பு கொள்வார்கள் என்றும் மேல்முறையீட்டு மனு பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேலும் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!