ரூ.1000 உரிமைத்தொகை பயனர்களின் எண்ணிக்கையை உயர்த்த திட்டம் – வெளியான ஹாப்பி நியூஸ்!!
தமிழகத்தில் 1.13 கோடி குடும்ப தலைவிகள் ரூ.1000 பெற்று வரும் நிலையில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.1000 உரிமைத்தொகை:
தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கிற்கு உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் ரூ.1000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் அமல்படுத்தப்பட்ட போது 1.06கோடி குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்பட்டது. அதன் பின்னர், மேல்முறையீடு செய்ததில் தகுதியுள்ள குடும்ப தலைவிகளும் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டனர்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு கடும் ஆடை கட்டுப்பாடு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!
அந்த வகையில், நவம்பர் மாதத்தில் மட்டுமே மொத்தமாக 1.13 கோடி குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது. அதே போல, இந்த மாதமும் லட்சக்கணக்கான குடும்ப தலைவிகள் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் அடுத்த மாதம் மொத்த பயனர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்குமா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.