டிச மாத ரூ.1,000 உரிமைத்தொகை உங்களுக்கு கிடைத்து விட்டதா? – செக் பண்ணுங்க மக்களே!
தமிழக அரசு டிசம்பர் மாதத்திற்கான உரிமைத் தொகையை குடும்பத் தலைவிகளின் கணக்கில் வரவு வைத்து விட்டதாக தெரிவித்துள்ளது.
உரிமைத்தொகை:
தமிழக அரசு தகுதியுள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 உரிமைத் தொகையாக வழங்கப்படும் என்று சூப்பர் திட்டத்தை அறிவித்தது. இந்த உரிமைத்தொகை மூலம் வாழ்நாள் முழுவதும் தனது குடும்பத்திற்காக உழைக்கும் பெண்களின் உழைப்பு அங்கீகரிக்கப்படுவதாகவும், அவர்களின் மேம்பாட்டிற்கு உதவும் நோக்கத்துடனும் திட்டம் செயல்படுத்தப்படுவதாக முதல்வர் தெரிவித்திருந்தார். செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட்ட மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மாதம் தோறும் 15 ஆம் தேதி பெண்களின் வங்கி கணக்கில் தொகை செலுத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.
TET தேர்விற்கான தேதியில் மாற்றம் – வலுக்கும் கோரிக்கை!!
கடந்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 10ம் தேதி அன்று உரிமைத்தொகை செலுத்தப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் மாதத்திற்கான உரிமை தொகை வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக அரசு தற்போது தகவலை தெரிவித்துள்ளது. இதனால் குடும்பத்தலைவிகள் அனைவரும் தங்களது வங்கி கணக்கில் சென்று உரிமைத்தொகை வந்துள்ளதை சோதித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.