Home news தமிழகத்தில் சாலை வரியை உயர்த்திய அரசு – குமுறும் தொழில் துறையினர்!

தமிழகத்தில் சாலை வரியை உயர்த்திய அரசு – குமுறும் தொழில் துறையினர்!

0
தமிழகத்தில் சாலை வரியை உயர்த்திய அரசு – குமுறும் தொழில் துறையினர்!
தமிழகத்தில் சாலை வரியை உயர்த்திய அரசு - குமுறும் தொழில் துறையினர்!
தமிழகத்தில் சாலை வரியை உயர்த்திய அரசு – குமுறும் தொழில் துறையினர்!

தமிழகத்தில் உயர்த்தப்பட்ட சாலை வரிகளை மீண்டும் திரும்ப பெற வேண்டும் என்று தொழில் துறையினர் அரசுக்கு தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

சாலை வரி உயர்வு:

தமிழகத்தில் கடந்த மாதம் அரசு சாலை வரிகளின் உயர்வை அறிவித்தது. இதேபோல் இறக்குமதி வாகனங்களுக்கும், பழைய வாகனங்களுக்கும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் சரக்கு வாகனங்களுக்கு அதன் சுமைக்க ஏற்ப வரி உயர்வு அமலுக்கு வந்துள்ளது. சாலை வரி உயர்வானது வாகன ஓட்டிகளுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் அரசுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளது.

வில்லங்க சான்று வழங்குவதில் புதிய சிக்கல் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!!

அதன்படி இரு சக்கர வாகனம் முதல் 20 சக்கர வாகனம் வரை அனைத்து வாகனங்களுக்கும் மோட்டார் வாகன பதிவு வரி, சாலை வரி, பசுமை வரி, சாலை பாதுகாப்பு வரி போன்ற அனைத்தையும் 40% மேலாக அரசு உயர்த்தி உள்ளது. இதேபோல் உதிரி பாகங்களுக்கான வரியும், இன்சூரன்ஸ் சுங்க வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளது. அதிக வரி விதிப்பினால் தொழிலாளர்கள் கடும் சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் தமிழக அரசு சாலை வரி உயர்வு அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here