இந்திய பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்வு – பிரிட்டன் அரசு அறிவிப்பு!
உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்றின் காரணமாக சிவப்பு பட்டியலில் இருந்த நாடுகளில் இருந்து பயணிகள் பிரிட்டனுக்கு வர தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சில கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் பிரிட்டன் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் தளர்வு:
கொரோனா முதல் அலையை தொடர்ந்து இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்த நிலையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து ஐரோப்பிய நாடான பிரிட்டன் அரசு வெளிநாட்டு பயணியருக்கு கட்டுப்பாட்டை கடுமையாக்கியது. இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்த நேரத்தில் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை என நாடுகள் பட்டியலிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் இந்தியா சிவப்பு நிற பட்டியலில் இருந்தது. அதன் காரணமாக இந்திய பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு – மத்திய அரசுக்கு கோரிக்கை!
இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் சிவப்பு பட்டியலில் இருந்தது. தற்போது நோய் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதால் ஆரஞ்சு பட்டியலுக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே ஆரஞ்சு பட்டியலில் காணப்படும் நாடுகளில் இருந்து வரும் பயணிகள் பிரிட்டனுக்கு புறப்படுவதற்கு 3 நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் பிரிட்டன் வந்தடைந்ததும் பயணிகள் 10 நாட்கள் தங்களை தனிமைப்படுத்துதல் வேண்டும்.
TN Job “FB Group” Join Now
இதில் ஐரோப்பிய யூனியன், அமெரிக்க அங்கீகாரம் பெற்ற தடுப்பூசி போட்டுக் கொண்ட பயணிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதற்கு அவசியம் இல்லை எனவும் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டுக் கொண்டவர்களுக்கும் இந்த சலுகை வழங்கப்படும் என பிரிட்டன் அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இது போன்ற சலுகைகளுடன் இந்திய பயணிகளை பிரிட்டன் அரசு அனுமதிப்பதாக அறிவித்துள்ளது.