தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? சங்கத்தினர் கோரிக்கை!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுளின் நீண்ட கால கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
ஓய்வூதிய திட்டம்:
திமுகவினர் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினர். அதில் ஒவ்வொன்றாக தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதில் அரசு ஊழியர்களுக்கான முக்கிய வாக்குறுதிகளும் இடம் பெற்றது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்துவோம், அகவிலைப்படியை உயர்த்துவோம் என்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது . அதில் அகவிலைப்படி அடுத்த ஆண்டு முதல் உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த நிலையில் இதுவரை பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த எந்த அறிவிப்புகளும் இடம் பெறவில்லை.
TNPSC தொழிற்பயிற்சி நிறுவன முதல்வர் & உதவி இயக்குனர் காலிப்பணியிடங்கள் – நாளை மறுநாள் தேர்வு!
இதையடுத்து அரசு ஊழியர்கள் விரைவில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்ப்படுத்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் அரசு ஊழியர்களுளின் நீண்ட கால கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசை வலியுறுத்தியுள்ளனர். மேலும் ஊழியர்கள் போராட்டத்தில் பங்கெடுத்த அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான முக ஸ்டாலின் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய திட்டம் கொண்டு வரப்படும் என்று கூறினார் அதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
TNPSC குரூப் 4 VAO தேர்வர்களின் கவனத்திற்கு – கல்வித்தகுதி, வயது வரம்பு உட்பட A to Z விபரங்கள் இதோ!
மத்திய அரசு வழங்கியது போல மாநில அரசு ஊழியர்களுக்கும் 14 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்று அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும் அரசு துறைகளில் உள்ள 4 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். தீபாவளியையொட்டி நவம்பர் 7 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நவம்பர் 6 கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இதனால் சுகாதார ஊழியர்கள் பணிக்கு வருவதில் சிக்கல் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.