தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கும் ஆல்பாஸ் – அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கும் ஆல்பாஸ் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று மாநில அரசுக்கு பாஜக தேசிய மகளிரணி செயலாளர் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆல்பாஸ் கோரிக்கை:
தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு முதல் கொரோனா பரவல் காரணமாக கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் நலன் கருதி முன்னதாக பொதுத்தேர்வு பாடத்திட்டங்களில் அரசு 30% குறைத்து அறிவித்தது. குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படி, மே மாதம் பொதுத்தேர்வுகளை நடத்த அரசு திட்டமிட்டது. தொடர்ந்து கொரோனா தொற்றின் 2ம் அலை அதிக வேகத்தில் பரவி வந்த காரணத்தால் பொதுத்தேர்வுகளை அரசு ரத்து செய்து, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது.
TN Job “FB Group” Join Now
இதனால் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு மாற்று முறையில் மதிப்பெண்கள் வழங்க அரசு முடிவு செய்தது. அதன்படி, மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு கடந்த 19ம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால் தமிழகத்தில் தனித்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தனி அறிவிப்புகள் ஏதும் வெளியிடவில்லை. நடப்பு ஆண்டில் 1,50,000 மாணவர்கள் தனித்தேர்வர்களாக பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு அக்டோபர் மாதம் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
ATM, Credit கார்டுகளின் சேவை கட்டணம் உயர்வு – RBI திட்டம்!
இவர்களுக்கு நவம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியிட இருப்பதாகவும், அரசு அறிவித்தது. இந்நிலையில், அரசுக்கு தமிழக சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணி செயலாளருமான வானதி சீனிவாசன் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில், தனித்தேர்வர்கள் உயர்கல்வி சேர்க்கைக்கு உதவும் முறையாக அவர்களுக்கான முறையான மதிப்பீடு முறைகளை அரசு வெளியிட வேண்டும் என்றும், அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். தனித்தேர்வு மாணவர்களின் எதிர்கால நலன் கருதி அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.