விதி மீறிய வங்கிகளுக்கு ரூ. 2 லட்சம் அபராதம் – RBI அதிரடி!!
இந்திய ரிசர்வ் வங்கியானது விதிமுறைகளை மீறிய நான்கு வங்கிகளுக்கு ரூபாய் 2 லட்சம் அபராதம் விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அபராதம் விதிப்பு:
இந்திய ரிசர்வ் வங்கி ஆனது நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளின் மீதும் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறும் வங்கிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் நாட்டில் உள்ள நான்கு கூட்டுறவு வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி ஒழுங்குமுறை மற்றும் இணக்கம் குறைபாடு காரணங்களுக்காக அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகள் குறித்த அப்டேட் – ரிசர்வ் வங்கி வெளியீடு!
பாட்னாவில் உள்ள தபிந்து அர்பன் கோ ஆபரேட்டிவ் வங்கி லிமிடெட் மீது வெளிப்பாடு விதிமுறைகள் மற்றும் சட்டப்பூர்வ / பிறக்கட்டுப்பாடுகள் உத்தரவுகளுக்காக ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் இஸ்லாம்பூர் நகர கூட்டுறவு வங்கி லிமிடெட் வங்கி ஒழுங்குமுறை சட்டம் 1949 மற்றும் ஆர்பிஐ விதிமுறைகளுக்கு இணங்காததற்காக ரூபாய் 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற கூட்டுறவு வங்கி லிமிடெட் டெபாசிட் கணக்குகளை பராமரித்தல் மற்றும் கேஒய்சி கொள்கைகளுக்காக விதியை மீதியை குற்றத்திற்காக இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மங்கள் கூட்டுறவு வங்கி மீதும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.