கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரேஷன் விநியோகம் நிறுத்தம் – பொதுமக்கள் ஷாக்!!
ரேஷன் கடை ஊழியர்களுக்கு ரேஷன் கிட் விநியோகத்திற்கான கமிஷன் பாக்கி வழங்கப்படாத நிலையில் ரேஷன் விநியோகம் நிறுத்தப்பட இருக்கிறது.
ரேஷன் விநியோகம்:
கேரள மாநிலத்தில் அவ்வப்போது ரேஷன் கடை ஊழியர்களுக்கு கிட் வழங்கல் நிலுவைத் தொகை வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. இது தொடர்பாக, ரேஷன் கடை ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டும் நிலுவைத்தொகை வழங்கப்படுவதில்லை. இந்நிலையில், ரேஷன் கிட் விநியோகத்திற்கான கமிஷன் பாக்கி குறித்து ரேஷன் கடை உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பு – கல்வி இயக்குனர் அனுப்பிய சுற்றறிக்கை!
இந்த நிலுவைத்தொகையை அரசு வழங்கினால் மட்டுமே கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேவையான அரிசி, கோதுமை ஆகியவற்றை முன்பணம் கொடுத்து வியாபாரிகளிடம் இருந்து வாங்க முடியும். இல்லையெனில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ரேஷன் கடைகளின் வாயிலாக நீலம், வெள்ளை அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் மஞ்சள், இளஞ்சிவப்பு அட்டைதாரர்களுக்கு கோதுமை வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.