LPG சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு திரும்ப பெறுதல் – பாமக நிறுவனர் வலியுறுத்தல்!
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 850 ரூபாயிலிருந்து 875 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றத்தை திரும்ப பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சிலிண்டர் விலை உயர்வு:
இந்தியாவில் ஏராளமான மக்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்துகின்றனர். இது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து சிலிண்டர் விலையை உயர்த்தி வருகிறது. இது இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் சாமானிய மக்கள் வாழ்வாதாரம் இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சிலிண்டருக்கான மானியமும் 2020-21ம் நிதியாண்டில் 11,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
உலகில் அதிகளவு சம்பளம் பெறும் கால்பந்து வீரர்களின் பட்டியல் – முதலிடத்தில் லயோனல் மெஸ்ஸி!
கடந்த மார்ச் மாதம் ரூபாய் 25 ஏற்றப்பட்டு ஒரு சிலிண்டரின் விலை ரூபாய் 835க்கு விற்கபட்டது. மேலும் கடந்த ஜூலை மாதம் ரூபாய் 25.50 அதிகரித்து ரூ.850.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் விலை உயர்ந்துள்ளது. சமையல் எரிவாயு விலை 850 ரூபாயிலிருந்து 875 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் சமையல் எரிவாயு விலை 710 ரூபாயிலிருந்து 165 ரூபாய் அதாவது 23% உயர்த்தப்பட்டிருக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
TN Job “FB Group” Join Now
கொரோனாவால் வேலையிழந்து மக்கள் சிரமப்பட்டு கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே சமையல் எரிவாயு விலையை குறைக்கும் படி மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆணையிட வேண்டும். சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். மேலும் தமிழக அரசு மக்களுக்கு சிலிண்டர் எரிவாயுக்கு 100 ரூபாய் மானியம் வழங்கி, சிலிண்டர் விலையை குறைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.