மே 15 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
பஞ்சாப் மாநிலத்தில் தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் வரும் மே மாதம் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
நாடு முழுவதும் கொரோனா பேரலை காரணமாக ஒவ்வொரு மாநிலங்களிலும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் தினமும் இரவு நேர ஊரடங்குடன் கூடிய வார இறுதியில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அம்மாநிலத்தில் சில கூடுதல் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் மே 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி, பஞ்சாப் மாநிலத்துக்கு புதிதாக வருபவர்கள் 72 மணி நேரத்துக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பஞ்சாப் மாநிலத்தில் 7,327 புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இறப்பு எண்ணிக்கையும் 9,317 ஆக அதிகரித்துள்ளது. இதனால் இம்மாநிலத்தில் மேலும் சில கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன.
அதன்படி, மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கும். மருத்துவமனைகளுக்கு செல்லும் வாகனங்களை தவிர மற்ற அனைத்து நான்கு சக்கர வாகனங்களிலும் 2 பேருக்கு மட்டுமே அனுமதி. பால், ரொட்டி, காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் முட்டை, இறைச்சி, மொபைல் பழுது போன்ற அத்தியாவசிய தேவைகள் தவிர மற்றவை மூடப்பட்டிருக்கும்.
10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
அனைத்து அரசு, வங்கி அலுவலகங்களில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி. தனியார் அலுவலகங்களில் வீட்டிலிருந்தபடியே வேலை பார்க்க வேண்டும். திருமணம், இறப்பு போன்ற காரியங்கள் தவிர பிற இடங்களில் 10 பேருக்கு மேல் கூட அனுமதி கிடையாது. மதவழிபாட்டு தலங்கள் 6 மணிக்கு மேல் மூடப்பட்டிருக்க வேண்டும். சமூக, கலாச்சார, விளையாட்டு மற்றும் பிற கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், துணை ஆணையரின் அனுமதி இல்லாத திறப்பு விழாக்கள், அடிக்கல் நாட்டும் விழாக்கள் போன்ற அரசாங்க செயல்பாடுகளுக்கு முழுமையான தடை விதிக்கப்படும்.