அரசு ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு.. ஜன.1 முதல் இது கட்டாயம் – தலைமை செயலாளர் அதிரடி!

0
அரசு ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு.. ஜன.1 முதல் இது கட்டாயம் - தலைமை செயலாளர் அதிரடி!
அரசு ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு.. ஜன.1 முதல் இது கட்டாயம் - தலைமை செயலாளர் அதிரடி!
அரசு ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு.. ஜன.1 முதல் இது கட்டாயம் – தலைமை செயலாளர் அதிரடி!

புதுச்சேரியில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் அரசு ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை கட்டாயப்படுத்த தலைமை செயலாளர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

அரசு உத்தரவு

புதுச்சேரி அரசு துறைகளில் சுமார் 30 ஆயிரத்திற்கு அதிகமாக ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் சிலர் வேலையில் மெத்தனமாக இருப்பதாகவும், வேலை நேரத்தில் அலுவலகத்தில் இல்லாமல் இருப்பதும், உயர் அதிகாரிங்கள் உத்தரவுகளை நிறைவேற்றாமல் இருப்பது என பல குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. அது மட்டுமில்லாமல் அரசு ஊழியர்கள் அனைவரும் காலையில் 8.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை வேலை செய்ய வேண்டும். ஆனால் ஊழியர்கள் உரிய நேரத்திற்கு அலுவலகம் வருவதில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.

தமிழக பள்ளிகளுக்கு 11 நாட்கள் அரையாண்டு விடுமுறை – முழு பட்டியல் இதோ!!

இது குறித்து தலைமை செயலர் ராஜிவ் வர்மா அதிரடி உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ஜனவரி 1 ஆம் தேதி முதல் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும், பயோமெட்ரிக் வருகை பதிவை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த புகார்களை சரி செய்ய நிர்வாக சீர்திருத்தத்துறை அரசு ஊழியர்களின் வருகையை கண்காணிக்க தனிப்படை அமைத்தது. ஆனால் அதில் பலனில்லை எனவே இந்த உத்தரவை கடுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!