தமிழகத்தில் பேருந்து பொதுப்போக்குவரத்திற்கு அனுமதி? பொதுமக்கள் எதிர்பார்ப்பு!
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கானது ஜூன் 7 ஆம் தேதியுடன் முடிவடையும் என்பதால், மே 8 முதல் பேருந்து பொதுப்போக்குவரத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து அனுமதி:
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மாதம் 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக கடந்த ஏப்ரல் முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் பேருந்துகளில் பயணிகள் நின்று கொண்டு பயணிக்க தடை விதிக்கப்பட்டது. மேலும் முகக்கவசங்களை அணிவது போன்ற கட்டுப்பாடுகள் தீவிரமாக பின்பற்றப்பட்டு வந்தது.
TN Job “FB Group” Join Now
தமிழகத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் பொது முடக்க காலத்தில் மக்களின் அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்திற்கும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. அந்த வகையில் மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தளர்வில்லா பொதுமுடக்கமாக அறிவிக்கப்பட்ட இந்த 2 வாரங்களில், இறப்பு, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே இ-பதிவு மூலம் பொதுமக்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது.
சென்னையில் சரியும் கொரோனா பாதிப்பு – கட்டுப்பாட்டு பகுதிகள் 365 ஆக குறைவு!
தவிர மாநிலம் முழுவதுமான பேருந்து சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொது மக்களின் அத்தியாவசிய சேவைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜூன் 7 ஆம் தேதிக்கு மேல் தமிழகத்தில் முழு ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த தகவலின் படி ஒரு வேளை தளர்வுகள் அளிக்கப்பட்டால் பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி கொடுக்கப்பட வாய்ப்பில்லை என தெரிகிறது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் – முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை!!
அதாவது கொரோனா பாதிப்பு 500க்கும் குறைவாக உள்ள மாவட்டங்களில் மட்டும் தளர்வுகளின் அடிப்படையில் பேருந்து சேவைகளுக்கு அனுமதி கொடுக்கப்படலாம். தவிர அந்த சேவைகளும், மாவட்டங்களுக்கு உள்ளே அனுமதிக்கப்பட்டதாக இருக்கும். தொடர்ந்து மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் நிறுத்தி வைக்கப்படும் என தெரிகிறது. இருப்பினும், தமிழக அரசு பேருந்து செயல்பாடுகளுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
இப்போதைக்கு மக்கள் யாவரும் போக்குவரத்தை எதிர்பார்க்கவில்லை. பேருந்துகளை இரண்டு வாரங்கள் கழித்து முடிவு செய்யுங்கள். இப்போதைக்கு தயவுசெய்து கடைகளை மட்டும் திறக்க அனுமதியுங்கள். பேருந்தை விட்டால் கொரோனா திரும்பவும் பரவும் அபாயம் இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தயவு செய்து பெட்டிக்கடை சைக்கிள் கடை பழக் கடைகள் மளிகைக்கடை களை திறந்து விடுங்கள். கடைக்கு வாடகை கட்ட வேண்டும் இல்லாவிட்டால் ஒரு மாதம் வாடகையை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கட்ட தேவையில்லை என்ற அரசாணையை வெளியிடுங்கள். கடையை திறக்கவில்லை. வருமானமும் இல்லை எப்படி வாடகை மட்டும் கொடுக்க முடியும். கடையை திறக்க முடிவை எடுக்க. இல்லாவிடில் கடை வாடகை கட்டுவதற்கு நிவாரணம் வழங்குங்கள்.