5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இனி பொதுத்தேர்வு – அரசின் அதிரடி முடிவு!
5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டில் இருந்து பொது தேர்வு நடத்தப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பொதுத்தேர்வு
மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்தப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பிற்கு செல்ல முடியும் எனவும், தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு கூடுதல் வழிகாட்டுதலின்படி இரண்டு மாதங்களிலேயே மறுத்தேர்வு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த மறுத்தேர்விலும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் அதே வகுப்பில் மீண்டும் போடப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அஞ்சல் துறையில் சிறந்த RD திட்டம்.. ரூ.5000க்கு ரூ.8 லட்சம் வருமானம் – முழு விவரம்!
மேலும், தொடக்கக்கல்வி முடியும் வரை மாணவர்கள் ஒரு பள்ளியை விட்டு நீக்கப்பட மாட்டார்கள் எனவும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. ஏற்கனவே, மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்ட நிலையில் இடையிலேயே அந்த திட்டம் முழுமையாக நிறுத்தம் செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் அதிகளவிலான மாணவர்கள் தொடக்கக்கல்வி முடியும் முன்னரே படிப்பை நிறுத்தி விடுவதாக வந்த புகாரின் அடிப்படையில் பொது தேர்வு திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட இருக்கிறது. மேலும், இந்த கல்வியாண்டு முதல் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் எனவும் அரசு அறிவித்திருக்கிறது.