புதிய ரேஷன் கார்டு வழங்குவதில் தாமதம் – பொதுமக்கள் அவதி!!
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும்பணியை தீவிரப்படுத்த வேண்டும் என முக்கிய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
புதிய ரேஷன் கார்டு:
தமிழகத்தில் ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் அமல்படுத்தப்பட்ட போது தற்காலிகமாக புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும்பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புதிய ரேஷன் கார்டு பெற விரும்புபவர்கள் உணவு வழங்கல் துறையின் பொது வினியோக திட்ட இணையதள பக்கத்தின் மூலமாக விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பு – கல்வி இயக்குனர் அனுப்பிய சுற்றறிக்கை!
மேலும், தற்போது வரையிலும் லட்சக்கணக்கான ரேஷன் கார்டுதாரர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும், ஒப்புதல் வழங்கப்பட்ட 1லட்சம் கார்டுகள் இன்னும் அச்சடிக்கப்படாமல் அப்படியே இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில், பொதுமக்களின் நலன் கருதி மிக விரைவில் புதிய ரேஷன் கார்டுகளை தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.