வரம்பை தாண்டும் பள்ளி கட்டணங்கள் – தவிக்கும் பெற்றோர்!

0
வரம்பை தாண்டும் பள்ளி கட்டணங்கள் - தவிக்கும் பெற்றோர்!
வரம்பை தாண்டும் பள்ளி கட்டணங்கள் - தவிக்கும் பெற்றோர்!
வரம்பை தாண்டும் பள்ளி கட்டணங்கள் – தவிக்கும் பெற்றோர்!

தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்ததை விட அதிக கல்வி கட்டணத்தை வசூலிப்பதால் பெற்றோர்கள் தவிக்கும் நிலையில் உள்ளனர்.

கல்வி கட்டணம்:

நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் போட்டி போட்டுக் கொண்டு அதிக அளவில் வசூலித்து வந்த காரணத்தினால் அரசுகள் தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்திற்கு வரம்பை நிர்ணயித்துள்ளது. இருப்பினும் பெயரளவில் கல்வி கட்டணம் ஒன்று அறிவித்துவிட்டு அதற்கு மேலாக பல்வேறு காரணங்களை கூறியும் கட்டணங்களை பள்ளிகள் வசூலித்து வருகிறது. இதன் காரணமாக ஆண்டுக்கு ரூபாய் 1 முதல் 4.5 லட்சம் வரை கல்வி வாரியத்தை பொறுத்து கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஹைதராபாத் நகரில் பள்ளி கட்டணம் குறித்து பெற்றோர்கள் புகார்களை எழுப்பியுள்ளனர்.

முட்டை & மாமிசம் விற்க தடை – மாநில முதல்வர் அறிவிப்பு!

ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகள் 10 முதல் 15 சதவீதம் கட்டணத்தை உயர்த்து உயர்த்தி வருகின்றது. இதன் காரணமாக ஒன்றாம் வகுப்பு சேர்ப்பதற்கு குழந்தைகளுக்கு அதிக கட்டணம் செலவழிக்க வேண்டி உள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை கொண்ட குடும்பத்தின் நிலை மோசமடைகின்றது. இரண்டு குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் ஆண்டு கல்வி செலவு 4 லட்சத்திற்கும் மேல் ஆவதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு கல்வி கட்டணத்திற்கான வரம்பை தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்துமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!