மாநிலம் முழுவதும் கால வரையற்ற வேலைநிறுத்தம் – அதிரடி அறிவிப்பு!
கேரள மாநிலத்தில் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
வேலை நிறுத்த போராட்டம்:
கேரள மாநிலத்தில் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் திருவனந்தபுரத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது முக்கிய விவரங்களை தெரிவித்துள்ளனர். அப்போது கூட்டு போராட்ட குழு நிர்வாகிகள் அரசிடம் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பாக தங்களது கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். அதன்படி மாணவர்களுக்கான கட்டண உயர்வை மாற்ற வேண்டும். பேருந்துகளில் சீட் பெல்ட் மற்றும் கேமரா கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கேரளா போக்குவரத்து துறை அமைச்சரிடம் முன்னதாக தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.
புதிய பாம்பன் ரயில் பாலத்தின் பணிகள் தீவிரம் – இந்திய ரயில்வே வாரிய தகவல்!
முதற்கட்டமாக அக்டோபர் 31ஆம் தேதி அன்று மாநில முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், அரசு தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் நவம்பர் 21ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.