தமிழகத்தில் அதிகரிக்கும் காய்கறிகளின் விலை – கொரோனா எதிரொலி!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் காய்கறிகள் தேவை அதிகமாக இருப்பதால் தொடர்ந்து விலையேற்றம் காணப்படுகிறது.
காய்கறிகள் விலை:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மக்கள் உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தொடர்ந்து கொரோனா வைரஸ் தாக்கம் பதிவாகி வருவதால் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து கடைகளும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
9 முதல் 11ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு – அரசு ஆலோசனை!
ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக பள்ளி, கல்லூரிகள், தனியார் அலுவலகங்கள் முழு அளவில் திறக்கப்படாமல் உள்ளதால் பலர் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதனால் காய்கறிகள் தேவை அதிகமாக இருப்பதால் தொடர்ந்து விலையேற்றம் காணப்படுகிறது. இருந்த போதிலும் காய்கறிகளின் விலை நேற்றைய அளவிலேயே இன்றும் இருக்கிறது.
TN Job “FB Group” Join Now
கோயம்பேடு சந்தை மொத்த விலை நிலவரப்படி இன்று சென்னையில் ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெங்காயம் 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்றும் இதே விலையில் தான் விற்பனை செய்யப்பட்டது.
விலை நிலவரம்:
- தக்காளி – ரூ.20
- வெங்காயம் – ரூ.15
- அவரைக்காய் – ரூ.40
- பீன்ஸ் – ரூ.40
- பீட்ரூட் – ரூ.15
- வெண்டைக்காய் – ரூ.20
- நூக்கல் – ரூ.10
- உருளைக்கிழங்கு – ரூ.14
- முள்ளங்கி – ரூ.8
- புடலங்காய் – ரூ.15
- சுரைக்காய் – ரூ.10
- பாகற்காய் – ரூ.25
- கத்தரிக்காய் – ரூ.20
- குடை மிளகாய் – ரூ.20
- கேரட் – ரூ.45
- காலிபிளவர் – ரூ.20
- சவுசவு – ரூ.10
- தேங்காய் – ரூ.22
- வெள்ளரிக்காய் – ரூ.5
- முருங்கைக்காய் – ரூ.10
- இஞ்சி – ரூ.50
- பச்சை மிளகாய் – ரூ.15
- கோவைக்காய் – ரூ.6