Heroine ரோலில் மாஸாக சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ள பிரபல சின்னத்திரை நடிகை – ஆர்வத்தில் ரசிகர்கள்!
சன் டிவியில் சித்தி 2 சீரியல் மூலமாக ஏகப்பட்ட மக்களை கவர்ந்தவர் தான் நடிகை ப்ரீத்தி ஷர்மா. அந்த சீரியல் முடிவுக்கு பின் அவர் தற்போது புது சீரியல் ஒன்றில் கதாநாயகியாக என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அது குறித்த சூப்பர் அப்டேட் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை ப்ரீத்தி ஷர்மா:
சன் டிவியில் 90’ஸ் கிட்ஸ் மத்தியில் அதிகம் ரசிக்கப்பட்ட சீரியல் தான் சித்தி. இந்த சீரியலின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதிலும் மெயின் ரோலில் நடிகை ராதிகா நடித்து வந்த நிலையில், சித்தி 2 சீரியலும் மக்களின் பிரபலமான சீரியல்களில் ஒன்றாக இருந்தது. ஆனால் திடீரென நடிகை ராதிகா சீரியலை விட்டு விலகினார். அதனால் அவருக்கு பதிலாக மெயின் ரோலில் களமிறங்கியவர் தான் நடிகை ப்ரீத்தி ஷர்மா.
தன்னுடைய முதல் வாய்ப்பாக இருந்தாலும், எதார்த்தமான நடிப்பால் ஏகப்பட்ட ரசிகர்களின் விருப்பமான கதாநாயகியாக மாறினார். இந்நிலையில் அவருடைய நடிப்பால் அந்த சீரியல் வெற்றி அடைந்தது. அதன் பின் அந்த சீரியல் முடிவுக்கு வந்தது. அவரை சின்னத்திரையில் மீண்டும் எப்போது பார்க்க போகிறோம் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். தற்போது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது.
Exams Daily Mobile App Download
அதன் படி சன் டிவியில் புதிதாக தொடங்க இருக்கும் சீரியல் ஒன்றில் ப்ரீத்தி ஷர்மா என்ட்ரி கொடுக்க இருக்கிறார். சித்தி 2-க்கு பின் அவர் தமிழ் சீரியலில் என்ட்ரி கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் கேட்டு கொண்ட நிலையில், அந்த சீரியலில் நடிகர் அக்னிக்கு ஜோடியாக தற்போது ப்ரீத்தி ஷர்மா கமிட்டாகி இருக்கிறார். ஏற்கனவே இந்த சீரியலில் நடிகர் தினேஷ் மற்றும் நிவிஷா இன்னொரு ஜோடியாக களமிறங்க இருக்கிறார்கள். மேலும் இந்த சீரியலில் பல நட்சத்திர பட்டாளங்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த சீரியல் நவம்பர் முதல் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.