வழக்கறிஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ஒப்புதல் – முதல்வர் அறிவிப்பு!!
மாநிலத்தில் உள்ள பழைய மற்றும் மூத்த வழக்கறிஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்க துணை முதல்வர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
ஓய்வூதியம்:
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பழைய மற்றும் மூத்த வழக்கறிஞர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதாவது, வழக்கறிஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்காத காரணத்தினால் முதிர்வு காலத்திலும் உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக குற்றசாட்டு வைக்கப்பட்டுள்ளது.
ஆதாரை புதுப்பிக்க டிச.14 வரை இலவசம் – இப்போதே பண்ணுங்க!!
இது தொடர்பாக, நேற்று மாநிலத்தில் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ரவீந்திர ஷர்மா தலைமையிலான வழக்கறிஞர்கள் குழு நடைபெற்றது. அதன்படி, ஓய்வூதியத்தின் அடிப்படையில் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.15,000 வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், அதற்கான பட்ஜெட்டை ஒதுக்கீடு செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பழைய மற்றும் மூத்த வழக்கறிஞர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என துணை முதல்வர் பிரஜேஷ் பதக் ஒப்புதல் அளித்துள்ளார்.