புதுச்சேரி மாநிலத்தில் அரசு இயந்திரம் வேகமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் சில அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் கால தாமதமாக பணிக்கு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. மேலும் இந்த செயல் தொடர்ச்சியாக நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து அம்மாநில அரசு தற்போது ஒரு அதிரடி அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.
TNPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024 – 118 காலிப்பணியிடங்கள்!!
அதில், இனி அரசு ஊழியர்கள் யாரேனும் பணிக்கு தாமதமாக வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் அடிக்கடி சோதனை நடத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் தவறு இழைப்பவர்கள் மீது நடத்தை விதியின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து துறை தலைவர்களுக்கும் அம்மாநில நிர்வாக சீர்திருத்த துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.