‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகர் சரவண விக்ரமின் ஆரம்ப கால வாழ்க்கை – மனம் திறந்த அம்மா!
விஜய் டிவியில் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் கடைக்குட்டி கண்ணன் அதாவது நடிகர் சரவண விக்ரம் நடிக்கத் துவங்கிய ஆரம்ப கால கட்டத்தில் சந்தித்த கஷ்டங்கள் குறித்த சில விஷயங்களை அவரது அம்மா ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
நடிகர் சரவண விக்ரம்
மக்களின் மனம் கவர்ந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் கடைக்குட்டி கண்ணன் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் சரவண விக்ரம். இந்த சீரியலில் கண்ணன் கதாப்பாத்திரம் ஆரம்பத்தில் துறுதுறுவென்று, வெகுளியாக காட்டப்பட்டு வந்தது. ஆனால் ஐஸ்வர்யாவுடனான திருமணத்துக்கு பிறகு கண்ணன் பொறுப்பு மிக்கவராக மாறி இருக்கிறார். இதனுடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் லட்சுமி அம்மாவின் இறப்பு காட்சிகளின் போது அவரது நடிப்பு அதிகம் பேசப்பட்ட ஒன்றாக இருந்தது.
தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மூலம் அதிகளவு ரசிகர்களை சம்பாதித்துள்ள நடிகர் சரவண விக்ரம் மதுரையை சொந்த ஊராக கொண்டவர். சினிமா மீதுள்ள ஆர்வத்தினால் வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்துள்ள இவர் ஆரம்பத்தில் சில குறும்படங்களில் நடித்து வந்து கொண்டிருந்தார். இதையடுத்து ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர், முல்லைக்கு பிறந்த இரட்டை குழந்தைகள் – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
ஆனால் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலுக்கு வருவதற்கு முன்னதாக சரவண விக்ரம் சந்தித்து வந்த கஷ்டங்கள் குறித்து அவரது அம்மா முதன் முறையாக மனம் திறந்துள்ளார். அதாவது நடிகர் சரவண விக்ரம் சென்னைக்கு வந்த ஆரம்பகட்ட காலங்களில் தொடர்ந்து சில நாட்களாக கையில் பணம் இல்லாமல் மிகவும் கஷ்டங்களை சந்தித்ததாகவும், இந்த விஷயத்தை அவர் ஒருவரிடமும் சொல்லவில்லை எனவும் அதை ஒரு நேர்காணலின் போது சரவண விக்ரம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.