இருமல் மருந்தின் தயாரிப்பை உடனடியாக நிறுத்த உத்தரவு – மத்திய அரசு அறிவிப்பு!
இருமல் மருந்தை சாப்பிட்டு 12 குழந்தைகள் உயிரிழந்துள்ள நிலையில் இருமல் மருந்தின் தயாரிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இருமல் மருந்து:
புது டெல்லியில் இருமல் மருந்து குடித்து 12 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில், குழந்தைகள் அருந்திய நேச்சர் கோல்டு என்கிற இருமல் மருந்தை மாநில மருந்து கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி விதிப்பு – நிதியமைச்சர் முக்கிய அறிவிப்பு!
ஆய்வின் முடிவில் நேச்சர் கோல்டு இருமல் மருந்தில் அதிக அளவில் நச்சுத் தன்மை கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, மத்திய பிரதேசம் மாநிலம் மற்றும் இந்தூரில் ரீமான் லேப்ஸ் என்கிற நிறுவனம் இந்த நேச்சர் கோல்டு இருமல் மருந்தை தயாரித்து வருகிறது. இந்நிலையில், நீண்ட சோதனைகளுக்குப் பிறகு நேச்சர் கோல்ட் மருந்தின் தயாரிப்பு உடனடியாக நிறுத்த வேண்டும் என ரீமான் லேப்ஸ் நிறுவனத்திற்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.