தமிழகத்தில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம்!

0

தமிழகத்தில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை:

நாடு முழுவதும் தென்மேற்கு பருவ மழை பொழிய தொடங்கியுள்ளது. இந்நிலையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், காரைக்கால் மற்றும் புதுவையிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்கம் வாங்க போறீங்களா?அப்போ கட்டாயம் இன்றைய தங்கத்தின் விலை என்னனு தெரிஞ்சுக்கோங்க!

அதனை தொடர்ந்து திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மலைப் பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றும் நாளை நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அங்கங்கே பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!