தமிழகத்தில் அடுத்து வரும் 2 நாட்கள் மிக கனமழை – ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை!
சென்னை வானிலை ஆய்வு மையமானது தமிழகத்திற்கு இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆரஞ்சு அலர்ட்:
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக வட தமிழகம் முழுவதும் நிலைகுலைந்து தற்போது தான் சீரமைப்பு பணிகள் அனைத்தும் நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழக மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கக் கூடிய வகையில் புதிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. வானிலை மையத்தின் அறிக்கையின்படி தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு தினங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பால் கொள்முதல் விலை ரூ. 3 உயர்வு – முதல்வர் கருத்து!
குறிப்பாக இப்பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இப்பகுதிகளில் 12 முதல் 20 சென்டிமீட்டர் மழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், பொதுமக்கள் அனைவரும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாக இருக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.