முதியோர் ஓய்வூதியம் ரூ.3000ஆக உயர்த்தப்படும் – முதல்வர் அறிவிப்பு!
ஆந்திர மாநில அரசு சார்பில் முதியோர் ஓய்வூதியம் பெறுவோருக்கு ஜனவரி 1 முதல் ஓய்வூதியம் ரூ.3000 ஆக உயர்த்தப்படும் என முதல்வர் பேசி இருக்கிறார்.
ஓய்வூதியம் உயர்வு
ஆந்திர மாநிலம், என்டிஆர் மாவட்டத்தில் உள்ள விஜயவாடா இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஜெகன்மோகன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் 4 ஆண்டுகால ஆட்சியில் பல புரட்சிகரமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர் ஜனவரி 1 முதல் முதியோர் ஓய்வூதியம் ரூ. 3000 ஆக உயர்த்தப்படும் என தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டென உயர்ந்த ஆபரணத்தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம் இதோ!
அதே போல மக்கள் மார்ச் மாதத்தில் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என தெரிவித்தார். நமது தேர்தல் அறிக்கையை ஒவ்வொரு வீடாக கொண்டு செல்வோம் என தெரிவித்த அவர், நன்மைகளை கிராமம், கிராமமாக அனைவரும் தெரிவிக்கும் பொறுப்பை நான் வைத்து இருப்பதாக தெரிவித்தார். மேலும் கிராம அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.