மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் – ஜனவரி 4ஆம் தேதி முதல்வருடன் நேரடி சந்திப்பு!!

0
மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் – ஜனவரி 4ஆம் தேதி முதல்வருடன் நேரடி சந்திப்பு!!

பழைய ஓய்வுதி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களை நேரில் சந்திக்க முதல்வர் அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளார்.

பழைய ஓய்வூதிய திட்டம்:

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு கடந்த 2004 ஆம் ஆண்டில் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட பல சாதகமான திட்டங்கள் இல்லாத காரணத்தினால் பழையபடி மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். அதன் அடிப்படையில் பல மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வரையிலும் ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

தமிழக ரேஷன் கடைகளில் அதிரடி மாற்றம் – இன்று முதல் அறிமுகம்!

இதனைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்திலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மாநில அரசு ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி வரும் மாநில அரசு ஊழியர்களின் பிரதிநிதிகளை சந்திக்க முதல்வர் பகவந்த் மான் ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கான கூட்டம் ஜனவரி நான்காம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!