முதியோர் ஓய்வூதியத்திற்கு மாதம் ரூ.2000 கோடி – முதல்வர் அறிவிப்பு!

0

முதியோர்களுக்கு வழங்கும் மாதாந்திர ஓய்வூதிய தொகைக்காக அரசு மாதம் ரூபாய் 2000 கோடி செலவிடுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஓய்வூதியம்:

ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது தனது அரசு மக்களுக்கு செய்துள்ள நலத்திட்டங்களை குறித்த விவரங்களை தெரிவித்துள்ளார். அவரது உரையில் ஒய் எஸ் ஆர் சி அரசு ஆந்திராவில் சுமார் 66 லட்சத்திற்கும் மேற்பட்ட முதியோர்களுக்கான ஓய்வூதிய தொகையை மாதம் ரூபாய் இரண்டாயிரத்திலிருந்து மூன்றாயிரம் ஆக உயர்த்தி வழங்கி வருகிறது. இதற்காக அரசுக்கு மாதம் தோறும் ரூபாய் 2000 கோடி செலவாகும். ஆண்டுக்கு ரூபாய் 24 ஆயிரம் கோடி செலவிடுவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தமாக ஓய்வூதியத்திற்கு ரூபாய் 90 ஆயிரம் கோடிக்கு மேல் அரசு செலவில் உள்ளது.

கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் வேலை – டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.50,000/- மாத ஊதியம்!

இது வேற எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு அதிகபட்ச செலவாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு முந்தைய அரசு மக்களின் நலனை சிந்திக்க தவறி விட்டதாகவும் தனது அரசு மக்கள் வீட்டு வாசலிலேயே அனைத்து நலத்திட்டங்களையும் பெறுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார். ஏழைகளுக்கு நலத்திட்டங்களை வழங்குவதில் ஆந்திர பிரதேச அரசுடன் போட்டியிடும் மாநிலம் நாட்டிலேயே வேறு இல்லை என்று பெருமிதம் பொங்க ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!