பள்ளி மாணவர்களுக்கு ரூ.5 கட்டணத்தில் நவீன பேருந்து வசதி – அரசின் சூப்பர் திட்டம்!
ஒடிசா மாநிலத்தில் மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் பெண்களுக்காக ரூ.5 கட்டணத்தில் பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டு இருக்கிறது.
ரூ.5 கட்டணத்தில் நவீன பேருந்து வசதி:
இந்தியாவில் தமிழக அரசும், தெலுங்கானா அரசும் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் திட்டத்தை அமல்படுத்தி இருக்கிறது. இந்த திட்டம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் பெண்கள் இதன் மூலம் படிப்பிலும், தொழிலும் முன்னேறி வருகின்றனர். இந்நிலையில் இந்த திட்டத்தை முன்னோடியாக வைத்து ஒடிசா மாநில அரசு புதிய திட்டத்தை அமல்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் நாளை (டிச.16) கரண்ட் இருக்காது – முழு விவரங்கள் வெளியீடு!
அதாவது மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்காக ரூ. 5 கட்டணத்தில் பேருந்து சேவையை தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நகரங்களை இணைக்க கூடிய பல்வேறு வகையிலான போக்குவரத்து முறைகள் முன்னெடுப்பின் கீழ் மாநில அரசு 1,623 பேருந்துகளை கிராமப்புறப் பகுதிகளுக்கு ரூ.3,178 கோடி செலவில் இயக்கவுள்ளது. இதன் மூலம் முதற்கட்டமாக 1,131 கிராம பஞ்சாயத்துகளில் வசிக்கும் 63 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.