இரயில்வே NTPC தேர்வெழுதியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேர்வு கட்டணம் ரிட்டன்ஸ்!

0
இரயில்வே NTPC தேர்வெழுதியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேர்வு கட்டணம் ரிட்டன்ஸ்!
இரயில்வே NTPC தேர்வெழுதியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேர்வு கட்டணம் ரிட்டன்ஸ்!
இரயில்வே NTPC தேர்வெழுதியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேர்வு கட்டணம் ரிட்டன்ஸ்!

இந்திய ரயில்வேயின் என்.டி.பி.சி. தேர்வு எழுதிய அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் தேர்வு கட்டணம் அவர்களது வங்கி கணக்குகளுக்கு மீண்டும் செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

என்.டி.பி.சி தேர்வு:

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக அரசு துறை பணியிடங்களுக்கான மத்திய மற்றும் மாநில அரசுகளின் போட்டித்தேர்வுகளை ஏதும் நடைபெறவில்லை. இதனால் பல்வேறு துறைகளில் அதிக எண்ணிக்கையிலான காலிப்பணியிடங்கள் உள்ளது. இதனால் தற்போது பணியில் உள்ள அரசு ஊழியர்களுக்கு பணி சுமை அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்து வருகிறது. இதனால் அரசுத்துறை காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளது. இதனையடுத்து மத்திய மாநில அரசுகள் அரசு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஜனவரி 8ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

அந்த வகையில் இந்தியாவில் மிக பெரிய பொதுத்துறையான ரயில்வே வேலைவாய்ப்புகள் குறித்து மக்கள் அதிகம் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் ரயில்வேத்துறையில் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற என்.டி.பி.சி தேர்வுக்கான கட்டணத்தை விண்ணப்பதாரர்களுக்கு மீண்டும் அவர்கள் வங்கி கணக்கில் செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு ரயில்வே துறையின் என்.டி.பி.சி தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் இருந்தும் 1 கோடியே 25 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினர். இத்தேர்வு 7 கட்டங்களாக 2021 ஜூலை மாதம் வரை நடைபெற்றது. இந்த என்.டி.பி.சி. தேர்வின் முடிவுகள் வரும் ஜனவரி 15ம் தேதி வெளியாகவுள்ளது.

திருப்பதி செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – ஜனவரி 18 முதல் விமான சேவை தொடக்கம்!

இதையடுத்து வினாத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் நலன் கருதி தேர்வு கட்டணத்தை திரும்ப அவர்களிடம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. தேர்வு கட்டணமாக பட்டியல் இனத்தவர்கள், பெண்கள் சிறுபான்மையினர், திருநங்கைகளுக்கு தேர்வு கட்டணமாக ரூ.250 மற்றவர்களுக்கு 400 ரூபாயும் வசூலிக்கப்பட்டது. தற்போது இந்த தேர்வு முடிவடைந்ததை அடுத்து தேர்வு கட்டண, விண்ணப்பதாரர்களின் வங்கி கணக்கில் வங்கி சேவை கட்டணம் ரூ.10 பிடித்தம் போக மீதி தொகை செலுத்தப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!