மத்திய அரசின் சூப்பரான திட்டம் – மாதம் 1.7 லட்சம் கிடைக்கும்.. கணக்கீடு இதோ!
தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1 லட்சம் வரை ஓய்வூதியம் கிடைக்கும். இது தொடர்பான கணக்கீட்டை இப்பதிவில் காண்போம்.
NPS திட்டம்:
இந்தியாவில் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களும் தனியார் துறை நிறுவனங்களும் இணையலாம். 18 வயது முதல் 70 வயது வரை இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யலாம். கடந்த 2004 ஆம் ஆண்டு திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் வாயிலாக ஏராளமானோர் பயன் அடைந்து வருகின்றனர். 60 வயதிற்கு பிறகு சிறந்த மாதாந்திர ஓய்வூதியம் பெற வேண்டும் என எண்ணுபவர்களுக்கு இந்த திட்டம் மிகவும் சிறந்ததாகும்.
மதுபான பாட்டில்களில் பார் கோடு ஸ்டிக்கர் – டாஸ்மாக் நிர்வாகத்தின் புதிய திட்டம்!!
அதிகபட்சமாக இதில் மாதம் ரூ.1 லட்சம் வரை கூட ஓய்வூதியம் பெறலாம். உதாரணமாக 25 வயது உள்ள நபர் திட்டத்தில் சேர்ந்தால் 35 ஆண்டுகளில் சுமார் 45 லட்சம் ரூபாயை சேமிக்கலாம். முதிர்வு தொகையாக ரூ. 4.5 கோடி இருக்கும். உங்கள் ஓய்வுக்குப் பிறகு அதாவது 60 வயதுக்கு பிறகு மாதம் 1.7 லட்சம் வரை வருமானம் கிடைக்கும். மேலும் இத்திட்டத்தில் வருமான வரி சட்டத்தின் படி 50,000 வரை வரி விலக்கு அளிக்கப்படும்.