மதுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த அரசு – இனி எவ்வித சலுகைகளும் கிடையாது! அதிரடி உத்தரவு!
டெல்லியில் 1 மதுபானம் வாங்கினால் 1 இலவசம் மற்றும் தள்ளுபடி முதலான பல சலுகைகள் கொடுக்கப்பட்டு வந்தது. மதுபிரியர்களின் அட்டகாசம் தாங்க முடியாமல் டெல்லி அரசு அந்த சலுகைகள் இனி கிடையாது என அதிரடி உத்தரவிட்டுள்ளது.
மது விற்பனை
டெல்லியில் இயங்கிவரும் சில்லறை மதுபான விற்பனையாளர்கள் மதுபான கடைகளில் அவ்வப்போது இலவசம் முதலான பல சலுகைகளை கொடுத்து வருகின்றனர். ஒரு மதுபானம் வாங்கினால் மற்றொரு மதுபானம் இலவசம் மற்றும் தள்ளுபடி முதலான பல சலுகைகளை கொடுத்து வந்ததால் மக்கள் பலரும் இந்த மதுபான கடைகளில் குவிய ஆரம்பித்துவிட்டனர். இப்படி இந்த சலுகைகளை கொடுத்துவரும் மதுபான கடைகளுக்கு கூட்டம் அலைமோதி கொண்டிருப்பதால் டெல்லி அரசு ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலினின் 69வது பிறந்தநாள் இன்று – குவியும் வாழ்த்துக்கள்!
சில கடைகளில் கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளதாம். அதுமட்டுமல்லாமல் மதுபான கடைகளுக்கு அருகில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் இந்த மாதிரியான மதுபான கடைகளின் மீது குற்றம் சுமத்த ஆரம்பித்துவிட்டனர். இது மாதிரியான சச்சரவுகளை போக்க டெல்லி அரசு ஒரு மதுபானம் வாங்கினால் மற்றொரு மதுபானம் இலவசம் மற்றும் தள்ளுபடி முதலான பல சலுகைகள் இனி கிடையாது என அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கான சிறந்த X – பேக்டர் இவர்கள் தான்? பிராட் ஹாக் கருத்து!
மார்ச் 31 ஆம் தேதிக்கு பிறகு ஒரு மதுபானம் வாங்குனால் மற்றொரு மதுபானம் இலவசம் மற்றும் தள்ளுபடி முதலான எந்த சலுகையும் கிடையாது என அறிவித்துள்ளது. இந்த அதிரடி உத்தரவால் மது பிரியர்கள் பலரும் மது பாட்டில்களை இப்போதே வாங்கி வீட்டில் பதுக்கி வைக்க ஆரம்பித்துவிட்டனர். மேலும் இந்த அரசின் உத்தரவை மீறி மதுபான கடைகளில் தள்ளுபடி முதலான சலுகைகளை கொடுத்து வந்தால் அந்த விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.