தெலுங்கானா மாநிலத்தில் ரூ. 500க்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது யார் யாருக்கு என்பது குறித்த அறிவிப்பினை வெளியிடப்பட்டுள்ளது.
சிலிண்டர்:
தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு ரூ. 500க்கு சிலிண்டர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதாவது, வீடு வீடாக ஊழியர்கள் சென்று ரேஷன் கார்டுகள் மற்றும் பிற அரசு அடையாள சான்றிதழ்களை சரி பார்த்து வருகிறார்கள்.
உங்கள் ஏரியாவில் நாளை (9.2.2024) மின்தடையா? – செக் பண்ணிக்கோங்க!
மாநிலத்தில் உள்ள தகுதியுள்ள வெள்ளை ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டுமே ரூ. 500க்கு எரிவாயு சிலிண்டர்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் மொத்தமாக 90 லட்சம் வெள்ளை ரேஷன் கார்டுகள் இருக்கும் நிலையில் 64 லட்சம் காடுதாரர்களுக்கு ரூ.500 க்கு எரிவாயு இணைப்பு வழங்க குடிமைப்பொருள் வளங்கள் துறையினர் முடிவெடுத்துள்ளனர்.