வீரியமடையும் புதிய வகை ஜெஎன்.1 கொரோனா தொற்று – சுகாதாரத்துறை எச்சரிக்கை!!
19 உருமாற்றங்களுடன் கூடிய புதிய வகை கொரோனா அதிவேகமாக பரவி வரும் நிலையில் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
கொரோனா:
இந்தியாவில் கொரோனா மூன்று அலைகளை தாண்டி மீண்டும் அதிக வீரியத்துடன் பரவ துவங்கியுள்ளது. அதிலும், குறிப்பாக நாட்டில் உருமாற்றமடைந்த புதிய வகை கொரோனா 19 உருமாற்றங்களுடன் மிகவும் வீரியம் வாய்ந்த ‘ஜெஎன்.1’ பரவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த புதிய வகை கொரோனா முதியவர்களை அதிகம் தாக்க வாய்ப்புள்ளதாகவும், கிட்னி மற்றும் இதய பிரச்சனைகளை உண்டாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடர் விடுமுறையால் பொதுத்தேர்வில் மாற்றம்? – அமைச்சர் விளக்கம்!!
தற்போது கேரள மாநிலத்தில் ஜெஎன்.1 அதி வேகமாக பரவி வருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால், அண்டை மாநிலமான தமிழக மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. கட்டாயமாக பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்லும்படியும், சமூக இடைவெளியை பின்பற்றும்படியும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த தொற்றின் வீரியத்தால் ஊரடங்கு அமலுக்கு வருமோ என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.