வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஜன.1லிருந்து பெரிய சிக்கல்!! உடனே இதை பண்ணுங்க!!
வங்கி வாடிக்கையாளர்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க டிச.31 ஆம் தேதிக்குள் கண்டிப்பாக சிலவற்றை செய்ய வேண்டும்.
வங்கி:
வங்கி வாடிக்கையாளர்கள் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்கவேண்டிய வேலைகள் குறித்த முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. SBI வங்கியின் நிலையான வைப்பு நிதி திட்டமான அம்ரித் கலாஷ் திட்டத்தில் சேர விரும்பினால் டிச.31ஆம் தேதிக்குள் இணைய வேண்டும். அதே போல, இந்த மாத இறுதிக்குள் வங்கியில் ஒப்படைந்திருந்த லாக்கர் ஒப்பந்தத்தை வாடிக்கையாளர்கள் வாங்கி திருத்தப்பட்ட ஒப்பந்தத்தை கையெழுத்திட்டு வழங்கும்படி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
TNPSC தேர்வுக்கு தயாராகுகிறீர்களா? முதல் முயற்சியிலேயே வெற்றி பெற இதை மட்டும் படியுங்க!!
அதே போல, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி தற்போது பண்டிகை கால சலுகையின் கீழ் வீட்டுக் கடனில் 65 அடிப்படை புள்ளிகள் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், இந்த சலுகையும் டிச.31 வரை மட்டுமே அமலில் இருக்கும். அடுத்ததாக, UPI ஐடி கடந்த ஒரு வருடமாக பயன்படுத்தவில்லை எனில் உடனடியாக பரிவர்த்தனை செயல்முறையை முடிக்கவும். இல்லையெனில், ஜன.1 ஆம் தேதிக்கு பிறகு UPI ஐடி செயலிழக்கப்படும். இந்த செயல்முறைகள் அனைத்தையும் டிச.31 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.