டிச.28ம் தேதி முதல் புதிய ரேஷன் கார்டுகளுக்கான விண்ணப்பங்கள் – முதல்வர் அறிவிப்பு!

0
டிச.28ம் தேதி முதல் புதிய ரேஷன் கார்டுகளுக்கான விண்ணப்பங்கள் – முதல்வர் அறிவிப்பு!

தெலுங்கானா மாநிலத்தில் புதிய ரேஷன் கார்டுக்காக காத்திருக்கும் மக்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் இது குறித்து முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

புதிய ரேஷன் கார்டுகள்:

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக புதிய ரேஷன் கார்டுகள் எதுவும் வழங்கப்படவில்லை. தற்போது மாநிலத்தில் மொத்தம் 89.98 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளது. புதிய ரேஷன் கார்டுகளுக்கு சுமார் ஒரு லட்சம் குடும்பங்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். புதிதாக அமைந்துள்ள ரேவந்த் ரெட்டி தலைமையிலான அரசு புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவது குறித்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல்வர் இன்று மாநிலத்தில் உள்ள அனைத்து கலெக்டர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார்.

வேகமெடுக்கும் கொரோனா பரவல் – விரைவில் ஊரடங்கு அறிவிப்பு

இந்த நிகழ்வில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவது குறித்த முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளார். குறிப்பாக டிசம்பர் 28ஆம் தேதி முதல் புதிய ரேஷன் காடுகளுக்கான விண்ணப்பங்கள் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதிய ரேஷன் கார்டுகளுக்கான விண்ணப்பங்கள் என்று சமூக வலைதளங்களில் போலியான படிவங்கள் பரவி வருகிறது. இதை வைத்து பலரும் பண மோசடிகளில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் இது குறித்து போதிய விழிப்புணர்வுடன் செயல்படுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!